Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2022 21:32:51 Hours

செவனப்பிட்டிய விகாரையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய புத்தர் சந்நிதானம் திறந்து வைப்பு

செவனப்பிட்டியவிலுள்ள 'மல்லிந்த ஸ்ரீ சுவர்ண பஹன புதபிம' விகாரையின் பௌத்த பிக்குகளின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய புத்த சந்நிதானம் பௌத மத சம்பிரதாயம் சடங்குகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது.

அதே தினத்தில் இடம்பெற்ற வருடாந்த 'கட்டின' பூஜை நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன விகாரையின் பிரதம விகாராதிபதி வண. திகம்பத்தன இரத்தினதீப அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பதாகை திரைநீக்கம் செய்து முழுமையாகக் கட்டப்பட்ட புதிய புத்த சந்நிதானத்தை திறந்து வைத்தார். கிழக்கு பிராந்தியத்தில் சேவையாற்றும் படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம் இதற்காக பயன்படுத்தப்பட்டது.

மகாசங்க உறுப்பினர்கள், கேணல் ராஜீவ் பெர்னாண்டோ, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதம சிவில் விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் , சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.