31st October 2022 21:09:52 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் 211 வது பிரிகேட் படையினரால் கடவத்தையில் உள்ள பிரபல வர்த்தகரான திரு. சுனில் விஜேவர்தன அவர்களின் அனுசரணையுடன் மதவாச்சி பிரதேசத்தின் நான்கு ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்கும் 194 பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
நன்கொடையாளரின் எண்ணத்தின்படி, புதன்கிழமை (26) அந்த உணவுகளை மதவச்சி நகரின் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் படையினரால் உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அ/கப்பிரிக்கம ஆரம்பப் பாடசாலை, அ/கரம்பன்குளம் ஆரம்பப் பாடசாலை, அ/லிந்தவெவ ஆரம்பப் பாடசாலை மற்றும் அ/கரப்பிக்கட ஆரம்பப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சுவையான உணவை உண்டனர். இவ் வினியோக நிகழ்வில் நன்கொடையாளரின் பிரதிநிதிகள், 211 வது பிரிகேட் தளபதி மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.