Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2022 21:37:51 Hours

சிப்பாயினால் ஆசிரியையின் ஆபரணம் மீட்பு

ஒக்டோபர் 14 ம் திகதி மாத்தறை நகரின் அரச பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் ஆசிரியை ஒருவரின் தங்க நகையைப் பறித்துச் சென்ற திருடனை விடுமுறை முடிந்து முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சரியான நேரத்தில் துனிச்சலுடன் செயற்பட்டு துரத்தி பிடித்தார்.

சுமார் ரூபா 144,000/= பெறுமதியான தங்க அட்டியலை கொள்ளையடித்துச் சென்ற நபரை கண்ட இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் சிப்பாய் அவரைப் பின்தொடர்ந்து ஓடிச்சென்று அவர் வைத்திருந்த நகையுடன் அந்த திருடனைப் பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட திருடன் மேலதிக விசாரனைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் சிப்பாயின் துணிச்சலைப் பாராட்டி தனது நன்றியை தெரிவித்தார்.