31st October 2022 20:19:31 Hours
இராணுவத் தளபதியின் செயலகம், முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகம், நிர்வாகம் மற்றும் நிகழ்வு படையலகு, இராணுவ சேவை வனிதையர் பிரிவு மற்றும் அதிகாரிகள் உணவகம் ஆகியவற்றில் சேவையாற்றும் 50 சிவில் ஊழியர்களுக்கு இராணுவ சேவா வனிதையர் பிரிவு அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை (31) நிவாரண உலர் உணவுப் பொதிகளை வழங்கப்பட்டன.
இத் திட்டமானது இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பு பங்கு பரிவர்தன சந்தையின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்விற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் அனுசரணையாளர்கள் உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் கொழும்பு பங்கு பரிவர்தன சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு ரஜீவ பண்டாரநாயக்க, கொழும்பு பங்கு பரிவர்தன சந்தையின் சிரேஸ்ட முகாமையாளர் திரு ரேணுகா விஜேவர்தன, கொழும்பு பங்கு பரிவர்தன சந்தையின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் திரு செராஜ் ஒபேசேகர, அலுவலக அதிகாரி திருமதி ஷஷினி சுவாரிஸ் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு கேணல் நளிந்திர மகாவிதான ஆகியோர் கலந்துகொண்டனர்.
இராணுவத் தளபதி மற்றும் திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கொழும்பு பங்கு பரிவர்தன சந்தையின் அனுசரணையாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன் அவர்களின் நன்கொடைக்கு நன்றி தெரிவித்தனர்.