31st October 2022 21:04:32 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இராணுவ நலன்புரி நிதி பற்றிய அறிவினை பெற்றுக் கொள்ளவதற்காக விரிவுரையொன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் ஆலோசனையின் பேரில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.
இராணுவ நலன்புரி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்.எம் பாலசூரிய அவர்கள் இந்த விரிவுரையை நிகழ்த்தினார். இவ் விரிவுரை இராணுவத்தின் உறுப்பினர்களிடையே சிக்கனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையக பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்விற்கு வருகை தந்தார். இந்நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய் கலந்துகொண்டனர்.