28th October 2022 20:52:44 Hours
இராணுவத் தலைமையகத்தில் ஓய்வுபெறும் ரெஜிமென்ட் சார்ஜன்ட் மேஜர், அதிகாரவனையற்ற அதிகாரி - I ஆர்.ஜி.எம்.எஸ்.எஸ் ஜயவீர யுஎஸ்பீ அவர்கள் வெள்ளிக்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுடனான அரிய சந்திப்பின் போது, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கான முன்னுதாரணமான சேவைக்காக பாராட்டுக்களை பெற்றார்.
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெளியேறும் ஆர்எஸ்எம் உடனான சுருக்கமான சந்திப்பின் போது இராணுவத் தலைமையகப் பிரிகேட் மற்றும் இராணுவத்திற்கான அவரது அர்ப்பணிப்பான சேவையைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டதுடன், அவருக்கு பாராட்டுக்குரிய நினைவுச் சின்னத்தை வழங்கி அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், விடைப்பெறும் 9 வது கெமுணு ஹேவா படையணியின் அதிகாரவனையற்ற அதிகாரி – I ஆர்ஜிஎம்எஸ்எஸ் ஜயவீர யுஎஸ்பீ அவர்கள் இராணுவ தளபதியின் அன்பான அழைப்பிற்காக தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.