29th October 2022 11:18:41 Hours
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கெளரவ ஜூலி ஜே சுங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வியாழன் (27) அன்று ஸ்ரீ ஜயவர்தனபுர, பெலவத்தை, பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பிரதம சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.எம்.எல்.டி ஹேரத் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, அவர்களினால் வரவேற்கப்பட்டு, இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், இருதரப்பு படையினர்களுக்கிடையில் பயிற்சி ஒத்துழைப்பு, கண்ணிவெடி மற்றும் வெடிகுண்டுகளை அகற்றுதல், இலங்கை இராணுவத்தின் இணையப் பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் திறன்கள் போன்றவை குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
சிநேகபூர்வ சந்திப்பின் முடிவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்த தூதுவருக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.
இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர், லெப்டினன் கேணல் அந்தோனி சி.நெல்சன் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவரும் உடனிருந்தனர். தூதுவர் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்தார்.