19th October 2022 17:44:35 Hours
மாதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற இளம் அதிகாரிகளின் பாடநெறி எண்-67 ஏ, 2022 ஒக்டோபர் 14 அன்று நிறைவுபெற்றது.
படையணிகளை சேர்ந்த 83 இளம் அதிகாரிகள் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சிப் பாடசாலையில் 45 நாள் பயிற்சியைப் பயின்று அடுத்த கட்டப் பயிற்சிகளை நிறைவு செய்யும் பொருட்டு அவர்கள் நாடு முழுவதும் உள்ள பயிற்சிப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
லெப்டினன் டி.எம்.சி.எம்.பி தென்னகோன் அனைத்து பாடங்களிலும் தகுதியின் அடிப்படையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பயிற்சி பாடநெறியினை பின்தொடர்ந்த இளம் அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சிப் பாடசாலை தளபதி சான்றிதழ்களை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் தலைமை பயிற்றுவிப்பாளர், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.