19th October 2022 17:35:16 Hours
141 வது பிரிகேடின் 6 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் இராணுவ ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (18) பிக்குகளின் வேண்டுகோளுக்கு இணங்க கலல்பிட்டிய தாத்துகந்த ஸ்ரீ ஜினேந்திரராம ரஜ மஹா விகாரையில் 500 மல்லிகை மரக்கன்றுகளை நட்டனர்.
மேற்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் 14 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் பணிப்புரிமைக்கு அமைய 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விகாரையின் பிக்குகளினால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.