12th October 2022 14:00:38 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் எண்ணகருவிற்கமைய இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 16 அதிகாரிகள் மற்றும் 132 சிப்பாய்களுக்கு 'இராணுவ நலன்புரி வசதிகள்' தொடர்பான விரிவுரை நலன்புரி பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2 மேஜர் எம்.கே.ஆர் பண்டார அவர்களால் நடத்தப்பட்டது.
இவ் விரிவுரையில் நலன்புரி பணிப்பகத்தின் நலப் பிரிவு, நலன்புரி சங்க நிதியப் பிரிவு மற்றும் சுவசான நலன்புரி பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளின் வகிபாங்கு மற்றும் பணிகள் மற்றும் அதன் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இவ் விரிவுரையானது இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.