Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2022 11:00:04 Hours

59 வது படைப்பிரிவு தளபதிக்கு பிரியாவிடை

59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரிய பண்டார அவர்களுக்கு 59 வது படைப்பிரிவின் தலைமையக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற இராணுவ மரபுகளுக்கு அமைவாக பிரியாவிடை மரியாதை செலுத்தப்பட்டது.

59 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு படையணி நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து 59 வது படைப்பிரிவு அணிவகுப்பு சதுக்கத்தில் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அனைத்து படையினருக்கான உரையின் போது, தனது பதவிக் காலத்தில் வழங்கிய ஆதரவிற்கு அனைத்து படையினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, நிறுவனத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் அதே வழியில் உள்வரும் புதிய தளபதிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வலியுறுத்தினார். இத்துடன் அனைத்து நிலையினருக்குமான தேனீர் விருந்துபசாரம் மற்றும் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

59 வது படைப்பிரிவின் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.