12th October 2022 11:30:04 Hours
கெமுனு ஹேவா படையணி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர அவர்கள் திங்கட்கிழமை (03) அம்பாறை மல்வத்தை 24 வது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமனம் பெற்ற புதிய தளபதி பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் , அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு, புதிய தளபதி தனது அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் முறையாக கையெழுத்திட்டார்.
மேலும், அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதுடன், தனது பதவியேற்பின் நினைவாக வளாகத்தில் மரக் கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உறையாற்றினார்.
பிரிகேட் தளபதிகள், கேணல் பொது பதவிநிலை அதிகாரி, படைப்பிரிவு தலைமையக கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி அதிகாரி, கட்டளை அதிகாரிகள், கட்டளை பிரிவு சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றினர்.
மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம 22 வது படைப்பிரிவின் தளபதியாக நியமனம் பெற்றதனை அடுத்து குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளர்.