12th October 2022 12:00:04 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக விசேட அதிரடிப்படையின் மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க அவர்கள் நந்திக்கடல் 59 வது படைப்பிரிவு தலைமையகத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
59 வது படைப்பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். மேலும் அவர் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் படையினர்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ மரபுகளுக்கமைவாக 59 வது படைப்பிரிவின் படையினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதையை வழங்கினர்.
இதனை தொடர்ந்து, அவரது புதிய அலுவலகத்தில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பின்னர், இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக புதிய தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார், அங்கு அவர் படைப்பிரிவின் எதிர்கால பணிகள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 59 வது படைப்பிரிவின் பதவிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.