11th October 2022 13:27:44 Hours
தென் சூடான் சிறிமெட் லெவல் 2 மருத்துவமனையில் உள்ள 8 வது இலங்கை அமைதி காக்கும் படையினர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் முறையான ஐ.நா பணிக்கான பதக்கங்கள் வழங்கும் விழா அண்மையில் போரில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் மொஹான் சுப்ரமணியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டதுடன் கிழக்குப் பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் துருபா பிரகாஷ் ஷாஹ், கள அலுவலகத் தலைவர் மேடம் கீதா பயஸ் மற்றும் பல சிவில் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறிமெட் லெவல் 2 மருத்துவமனையில் உள்ள 8 வது இலங்கை அமைதி காக்கும் படை குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் என்எம் நிஃப்லர் வரவேற்புரை ஆற்றினார்.
அன்றைய நிகழ்விற்கு மேலதிகமாக, இந்நிகழ்வின் போது இலங்கை இராணுவத்தின் ஒழுக்கம், படைப்பிரிவு, ஒருமைப்பாடு, கற்றல் மற்றும் தலைமைத்துவத் திறன்களை அடையாளப்படுத்தும் முகமாக பயிற்சிக் காட்சி மற்றும் கலாசார நிகழ்வு என்பன இடம்பெற்றன.