09th October 2022 18:51:59 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா அவர்களின் கருத்தின் பேரில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி அனைத்து படையினர்களின் பொருளாதார தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை வழங்குவதற்கும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் திங்கட்கிழமை (03) மானிய விலையில் பொருட்கள் வழங்கும் "வணிக சந்தை" ஒன்றை நடாத்தியது.
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன், இந்த சந்தைத் திட்டத்தின் போது குறிப்பிட்ட உணவு பொருட்கள் பெருமளவான சலுகை விலையில் வழங்கப்பட்டன.
அனைத்து படையினர்களும் சந்தையை பார்வையிட்டதுடன், அவர்கள் பல்வேறு வகையான உள்நாட்டு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கினர். முன்னணி வணிகப் பிரிவுகள் இந்த ஏற்பாட்டுடன் இணைந்து தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தின.