08th October 2022 21:53:40 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மன்னாரில் அமைந்துள்ள 54 வது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் 11 வது இலங்கை பீரங்கிப் படையணியினர் மன்னார் வீதி சோதனையின் போது 71.59 கிராம் ஐஸ் (சுமார் ரூ. 461,500/= பெறுமதியான) போதைப் பொருளை வெள்ளிக்கிழமை (07) மீட்டுள்ளனர்.
வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இரவு 10.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து உரிமை கோரப்படாத போதைப்பொருள் பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக படையினர் அந்த போதைப்பொருள் பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார் பொலிஸார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.