Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2022 12:30:53 Hours

தியத்தலாவையில் இராணுவ கோல்ப் விளையாட்டு போட்டி

இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 67 வீரர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை இராணுவ கோல்ப் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுகிடையிலான கோல்ப் விளையாட்டு போட்டி - 2022 செப்டம்பர் 16 முதல் 17 திகதிகளில் தியத்தலாவ கொலோனிய பியட் கோல்ப் மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ கோல்ப் விளையாட்டு கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

ஆண்கள் பிரிவில் இலங்கை இராணுவ சிங்க படையணி சாம்பியன்ஷிப்பை வென்றனர், இரண்டாம் இடத்தை கெமுனு ஹேவா படையணி கைப்பற்றியது. பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் இலங்கை பொறியியலாளர் படையணி முறையே சாம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்