Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2022 17:46:42 Hours

பனாகொடவில் இரண்டாம் கட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கல்

அன்மைக்காலத்தில் இடம்பெற்ற கொந்தளிப்பான காலங்களில் தன்னலமற்ற முறையில் தமது கடமைகளை ஆற்றிய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 அதிகாரிகள் மற்றும் 95 படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (4) இலங்கை இலேசாயுத காலட்படையணி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ் விருது வழங்கும் விழா 9 ஆகஸ்ட் 2022 அன்று இராணுவத் தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தலைமையகத்திற்கு முதன்முறையாக வருகை தந்த ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் வழங்கப்பட்ட விருது வழங்களின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் கட்ட விருது வழங்கல் இடம்பெற்றது.

பனாகொடவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பரிசளிப்பு விழாவில், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா தலைமையில், பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் இதில் 12 அதிகாரிகள் மற்றும் 95 படையினர் பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லாவிடமிருந்து அந்தப் பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

இதன்படி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சார்பாக மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்கள் அந்தச் சான்றிதழை, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக வன்முறையை தீவிரப்படுத்துவதைத் தடுத்த அதிகாரிகள் மற்றும் படையினருக்கு வழங்கினர்.

14 வது படைப்பிரிவின் தளபதி, மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி , பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் 141 மற்றும் 144 வது பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.