Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2022 16:58:52 Hours

யாழ் படையினரால் பிள்ளை உள்ள விதவை பெண்ணுக்கு வீடு நிர்மாணிப்பு

குடாநாட்டு வறிய பொதுமக்களுக்கான யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வீடு நிர்மாணத் திட்டத்தின் மேலும் ஒரு கட்டமாக யாழ். சங்காணையில் மேலும் ஒரு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் திங்கட்கிழமை (3) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஆர்.ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் கனடாவில் வசிக்கும் திரு.வின்சன் சின்னதுரை அவர்களால் தனது மறைந்த தாயார் திருமதி ஜே.சி.சின்னதுரையின் நினைவாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் 51 வது படைப்பிரிவின் 513 வது பிரிகேட் படையினர் புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர மற்றும் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் உதய குமார ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்ட இந்நிகழ்வில் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட விதவைத் தாயான திருமதி சுலக்ஷனா விஜயகாந்த அவருக்கு புதிய வீட்டின் சாவியினை இந்து மத சடங்குகளுக்குப் பிறகு வழங்கப்பட்டது.

513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஸ்வி ராசிக் மற்றும் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.பி.சி.கே காரியவசம் ஆகியோரின் மேற்பார்வையில் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் வீட்டின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுபநேரத்தில் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதாதை திறத்து வைத்ததை தொடர்ந்து பயனாளி தனது குழந்தைகளுடன் புதிய வீட்டை பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் குடும்பத்திற்கு அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை நல்லெண்ணத்தின் அடையாளமாக அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நிகழ்வில் 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் உதய குமார, 513 வது பிரிகேட் தளபதி கேணல் ரிஸ்வி ராசிக், பயனாளியின் உறவினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.