07th October 2022 17:00:42 Hours
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் அப்பிள்டன் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு திங்கட்கிழமை (3) மரியாதை நிமித்தமாக விஜயத்தினை மேற்கொண்டார்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தூதுவர் மற்றும் அவர்களுடன் சென்ற குழுவினரை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் செயற்பாடுகள் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், சிவில் மற்றும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலை குறித்து தூதுக்குழுவினர் கேட்டறிந்தனர்.
சந்திப்பின் இறுதியில், நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் விருந்தினர் புத்தகத்தில்யாழ் பொதுமக்களின் அமைதி, ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் நீதியை மேம்படுத்துவதில் யாழ் பாதுகாப்புப் படையினரின் முழுமையான அர்ப்பணிப்புக்களை பாராட்டி தனது கருத்துக்களை பதிவிட்டார்.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோர் நல்லுறவு மற்றும் ஒத்துழைப்புக்கான நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
தலைமையகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் கேணல் பொதுப்பணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.