07th October 2022 16:59:01 Hours
24 வது படைப்பிரிவின் 242 வது பிரிகேட் படையினர் உட்பட முப்படைகளின் படையினர் மற்றும் பொலிஸாரினரால் அண்மையில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து 'சர்வதேச சுற்றுலா தினத்தை' முன்னிட்டு பொத்துவில் களப்பு மற்றும் அருகம்பே சுற்றுலா வலயத்தில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
242 வது பிரிகேடின் படையினர் அருகம்பே ‘ரூபஸ் பீச்’ ஹோட்டலில் பகல் வேளையில் நடைபெற்ற கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இணைந்து கொண்டனர்.
24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, 242 வது பிரிகேட் தளபதி கேணல் அனுருத்த சோலங்கராச்சி மற்றும் 242 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் பிரசன்ன டி சில்வா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 242 வது பிரிகேட் படையினர் இந் நிகழ்விற்கு முழுமையன ஆதரவை வழங்கினர்.