05th October 2022 20:48:26 Hours
இலங்கை சிங்க படையணியின் 66 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு 2022 ஒக்டோர் 01 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் இலங்கை சிங்க படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களை, இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமாலை அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
அதன் பின்னர் அவருக்கு நுழைவாயிலில் பாதுகாப்பு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் வருகை தந்த தளபதிக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க வண்ணமயமான இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட படையணியின் தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்திய பின்னர், அவர் சிறப்பு மேடையில் இருந்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், படையணியின் தளபதி, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, வளாகத்திலுள்ள இலங்கை சிங்க படையணியின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து, உயிர் தியாகம் செய்த 3929 இலங்கை சிங்க படையணி உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
அன்றைய விழாவின் முடிவில் அதிகாரிகளின் உணவகத்தின் அனைத்து படையினருக்குமான விருந்துபசாரத்திலும் தளபதி கலந்து கொண்டார். அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் அன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.