30th September 2022 12:34:40 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் யாழ்பாணம் வரணியாற்றல் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் கல்லூரியின் மாணவர்களின் குடிநீர் தேவைக்கு சுத்தமான தண்ணீர் இல்லாததால் ரூபா 1.5 மில்லியன் செலவில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கு “சர்வதேச இலங்கை கொரியா நண்பர்கள்” நிறுவனம் வழங்கியது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டல் 52 வது படைப்பிரிவு தலைமையகத்தின் மேற்பார்வையில் 522 வது பிரிகேட் படையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், இச்சமூக நலன் சார்ந்த செயற்றிட்டத்தின் அங்குரார்பண விழாவில் மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாக புதன்கிழமை (28) கலந்து கொண்டார்.
“சர்வதேச இலங்கை கொரியா நண்பர்கள்” நிறுவனத்தின் தலைவர் திரு சன் பொங் சோய், “சர்வதேச இலங்கை கொரியா நண்பர்கள்” நிறுவனத்தின் செயலாளர் திரு லசித நாணயக்கார, 52 வது படைப்பிரிவின் தளபதி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, 521 வது பிரிடே் தளபதி, 15 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.