27th September 2022 16:58:31 Hours
55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டல்களுக்கு இணங்க, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப் பிரிவின் கீழுள்ள 552 வது பிரிகேடின் 1 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் வெள்ளிக்கிழமை (23) யாழ்ப்பாணம் ஐயக்கச்சியில் உள்ள அரசு தமிழ் கலவன் பாடசாலைக்கு பெருமளவிலான நூலகப் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர். இதற்கான அனுசரணையானது தேசிய நூலக ஆவணச் சேவைச் சபை வழங்கியது.
இந்த திட்டம் எதிர்வரும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 20 நவம்பர் 2022 அன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான தேசிய நூலக ஆவணச் சேவை சபையின் பிரிவு உத்தியோகத்தர் திரு கலன சந்திமால் வீரதுங்க வாகிஸ்தா அவர்கள் மூலம் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர அவர்களினால் சிறுவர்களுக்கான கதைகள், விசித்திரக் கதைகள், நாவல்கள், கடந்த கால பரீட்சை வினாக்கள், புனைகதைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க தமிழ் நூல்கள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன.
அதிபர், ஆசிரியர்கள், சிவில் விவகார அதிகாரி, 1 வது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரோஹன திலகரத்ன மற்றும் சில மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.