23rd September 2022 21:42:05 Hours
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த, கிழக்கு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் 28 வது தளபதியாக வியாழக்கிழமை (22) மின்னேரியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதினை தொடர்ந்து இராணுவ பொறியியல் படையணி வீரர்களினால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மத அனுஷ்டானங்கள் மற்றும் 'பிரித்' பாரயணங்களுக்கு மத்தியில், மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர் முகாம் வளாகத்தில் அன்றைய தினத்தினை நினைவுகூறும் முகமாக மரக்கன்றென்று நடப்பட்டது.
இந்நிகழ்வின் போது அனைத்து பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.அவர் தற்போது மத்திய முன்னோக்கி பராமரிப்புப் பகுதி தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுதத் ரத்நாயக்கவிற்குப் பதிலாக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.