21st September 2022 17:36:16 Hours
மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் 39 வது தளபதியாக பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி, சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (16) பதவியேற்றார்.
பிரதான நுழைவாயிலில் புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் புதிய தளபதிக்கு இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்களிப்பட்டது. அலுவலகத்தில் பாரம்பரிய மங்கள விளக்கேற்றலினை தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு புதிய அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்றார்.
அன்றைய தினத்தினை நினைவு கூறும் முகமாக முகாம் வளாகத்தில் மாங்கன்றினை நாட்டியதனை தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் படையினருடன் உரையாடிய தளபதி இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் விவகாரங்களை மிகவும் திறமையாக நடத்த அவர்களின் ஒத்துழைப்பைக் கோரினார்.
அவர் தற்போதைய நியமனத்திற்கு முன்னர் ஆதன முகாமைத்துவப் பணிப்பாளராக இருந்தார், மேலும் அவர் இராணுவத் தலைமையக செயற்பாட்டுப் பணிப்பாளராக பிரிகேடியர் நஜீவ எதிரிசிங்க நியமனம் பெற்றமையை அடுத்து இவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.