21st September 2022 17:38:51 Hours
'ஆசிய தடகளப் போட்டி - 2023'க்கான தடகள வீரர்களைத் தெரிவு செய்வதற்கான சமீபத்திய போட்டியில் 2 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் கே.புவிதரன் 17 - 19 செப்டம்பர் 2022 தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற கோலூன்றி பாய்தல் போட்டியில் புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.
5 மீற்றர் 15 செமீ உயரம் பாய்ந்து இலங்கை இராணுவ தடகளப் பிரிவில் அங்கம் வகிக்கும் சிப்பாய் கே.புவிதரன் எதிர்காலத்தில் தேசிய அணிக்குள் நுழைவதற்குத் தகுதி பெற்றுளார்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான சிப்பாய் புவிதரன் 2021 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சிப்பாயாக இணைந்துக் கொண்டார்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி விளையாட்டுப் போட்டியில் அவர் வென்ற தங்கத்திற்கு மேலதிகமாக, தேசிய கனிஷ்ட விளையாட்டு விழா மற்றும் தேசிய பாடசாலை விளையாட்டு விழா ஆகியவற்றில் கோலூன்றி பாய்தல் போட்டிகளுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.