20th September 2022 21:00:07 Hours
வெலிகந்த பிரதேசத்தில் உள்ள பிக்குகள் மற்றும் மாணவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையக படையினரின் முயற்சியுடன் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று திரு குஷில் குணசேகரவின் ‘குண ஜய சதுட்ட பதனம’ அனுசரணையுடன் இலவச உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ், வெலிகந்த கடவத்மடுவ வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பால் மா பொதிகள், பிஸ்கட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் பிக்குமார்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பிரியந்த ஜயவர்தன பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் இந்த திட்டம் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் பிரபாத் ஹல்பகே அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நன்கொடை வழங்கும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.