Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 18:23:03 Hours

கஜபா படையணியின் ஓய்வுபெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவத் தலைமையகத்தின் முன்னாள் அணைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும், வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளருமான கஜபா படையணியின் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஆர்ஏடிஎஸ் சாந்த ரணவீர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சனிக்கிழமை (17) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

இராணுவத்தில் 33 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி, விரைவில் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் ஆர்ஏடிஎஸ் சாந்த ரணவீர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று கொண்டார். லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, மிக முக்கியமான கட்டங்களில் செயல்பாட்டு பணிப்பகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் சேவையாற்றிய போது, இராணுவத்திற்கான அவரது பணித்திறன், அர்ப்பணிப்பு மற்றும் சேவை ஆகியவற்றைப் பாராட்டினார்.

மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட காலாட் படை அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புப் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இராணுவத் தளபதி, விருந்தினர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களையும் ஆராய்ந்து அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஓய்வு பெற்றுசெல்லும் சிரேஷ்ட அதிகாரியின் கடமைகளை ஆதரித்த, அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கத்தையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்ஏடிஎஸ் சாந்த ரணவீர ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் சிறப்புப் பரிசுகளுடன் பாராட்டு மற்றும் பாராட்டுக்கான நினைவுச் சின்னத்தை வழங்கினார்.