20th September 2022 20:30:07 Hours
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் முதலாவது அறுவடை நிகழ்வு சனிக்கிழமை (17) இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலை படையினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இராணுவப் பயிற்சிப் பாடசாலையினால் பல மாதங்களுக்கு முன்பு ‘துரு மிதுரு - நவ ரடக்’ திட்டத்திற்கு ஏற்ப இராணுவப் பயிற்சிப் பாடசாலை வளாகத்திற்குள் சுமார் 2 ஏக்கர் சதுப்பு நிலத்தை உழுது, இராணுவத்தின் பசுமை விவசாயத் திட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் நெல் விதைக்கப்பட்டது.
சனிக்கிழமை (17) காலை 9.34 மணியளவில் பழங்கால சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கமைய மங்களகரமான அறுவடை நிகழ்வு ஆரம்பமானது. இந் நிகழ்வில் பயிற்சி பாடசாலை தளபதியும் படையினருடன் இணைந்துக்கொண்டார்.