20th September 2022 20:45:07 Hours
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை தலைமையகத்தில் சேவையாற்றும் பல்வேறு ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் படையினரிடையே நட்புறவையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை விளையாட்டு ஆண்டு விழா ஓகஸ்ட் 18 - 19 திகதிகளில் இடம்பெற்றது.
லெபனானில் உள்ள 13 வது இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படை குழுவின் சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவணையற்ற அதிகாரிகள் உள்ளடங்கிய படையினர் கயிறு இழுத்தல் போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த அணிகளை வீழ்த்தி 3 வது இடத்தைப் பெற்றனர்.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தலைமை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் புருனோ ஹீலி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இதேவேளை, லெபனானின் நகோராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் நீச்சல் போட்டியில் 3ஆம் இடத்தை இலங்கை இராணுவத்தின் கோப்ரல் ஆர்.ஏ.ஐ புஷ்பகுமார (40 மீ திறந்த பிரிவில்) பெற்றுக் கொண்டதுடன் 40 மீ x 4 திறந்த பிரிவு போட்டியில் 13 வது இலங்கை இராணுவப் படை பாதுகாப்பு குழுவினர் 2 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.