20th September 2022 19:45:35 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான படைப்பிரிவுகளுக்கிடையிலான கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிகள் சனிக்கிழமை (17) மன்னார், தள்ளடியில் அமைந்துள்ள 54 வதுபடைப் பிரிவு தலைமையக விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதிப்போட்டிகளை பார்வையிட்டு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
விரு விருப்பாக நடைப்பபெற்ற போட்டிகளை தொடர்ந்து, 54 வது படைப் பிரிவு வீரர்கள் இந்த ஆண்டு போட்டியின் சாம்பியன்களாக தெரிவு 21 வது படைப்பிரிவு துடுப்பாட்ட வீரர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். 15 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் மேஜர் எல்.எம் சுரங்க போட்டிகளின் தொடர் நாயகனாக விருது பெற்றார்.
வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இறுதிப் போட்டிகளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கண்டுகளித்தனர்.