17th September 2022 18:43:43 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியும், கஜபா படையணியின் படைத் தளபதியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாலியபுர கஜபா படையணியில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த ரணவீர அவர்கள் வெள்ளிக்கிழமை (16) படையணியிக்கு வருகை தந்த போது இராணுவ மரபுகளுக்கு இணங்க பாராட்டு விழா நடைபெற்றது.
புதிய இரு நட்சத்திர ஜெனரலை பெற்று, தலைமையகத்திற்கு வந்தடைந்ததும், படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் விஸ்வஜித் வித்யானந்த அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அன்றைய நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக அவருக்கு அணிவகுப்பு மைதானத்தில் இராணுவத்தின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்து சிப்பாய்களின் உணவகததில் இடம்பெற்றதுடன், மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றமைக்காக ஒரு கவர்ச்சிகரமான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தமைக்காக படையணியின் படைத் தளபதி மற்றும் தலைமையகத்தின் அனைத்து படையினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கஜபா படையணியின் பேரவை உறுப்பினர்கள், நிலையத் தளபதி, பிரதி தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.