18th September 2022 18:04:11 Hours
மே 2009 க்கு முன்னய போர்க்கள அனுபவங்கள் மற்றும் 1996 இல் தீர்க்கமான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து படையினர்களுக்குத் தெளிவுப்படுத்தும் நோக்கத்துடன், உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ் சமிந்த அவர்கள் தனது சொந்த புத்தகத்தை வெளியிடுவதற்காக சேகரித்த உண்மைகளின் அடிப்படையில் ஒரு விரிவுரையை நடத்தினார். (மரணத்திற்கு நடுவில் முல்லைத்தீவில் இருந்து).
மேஜர் ஜெனரல் ஜி.டி சூரியபண்டார மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விரிவுரையின் போது 59 வது படைப்பிரிவின் கீழ் கடமையாற்றும் பிரிகேட் தளபதிகள், பணிநிலை அதிகாரிகள் அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.