17th September 2022 09:22:24 Hours
இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டதாரிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சின்னம், இராணுவத் தளபதியின் சீருடையில் இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி, மேஜர் ஜெனரல் கே.ஏ.டி.ஏ கருணாசேகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ எம்எஸ்சீ அவர்களால் வெள்ளிக்கிழமை (16) தளபதி அலுவலகத்தில் வைத்து அணியப்பட்டது.
முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பாடநெறியின் பட்டமளிப்பு விழா புதன்கிழமை (14) இடம்பெற்றது, இதில் முதல் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பாடநெறியை முடித்த 31 முப்படை மற்றும் பொலிஸாருக்கு சின்னம் சூட்டப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், முதன்முறையாக வெளிநாட்டில் இதேபோன்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பாடநெறியைப் பின்பற்றியவர், சின்னம் கிடைத்ததும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதியுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பாடத்திட்டத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த உரையாடலின் முடிவில், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி நினைவுப் பரிசுகளாக இராணுவத் தளபதிக்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கழுத்துப் பட்டிகள் மற்றும் பின்களின் தொகுதிகளை அடையாளமாக வழங்கினார்.