Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2022 19:19:45 Hours

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி புதிய படைத் தளபதி பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் 15 வது படைத் தளபதியாக வியாழன் (1) பனாகொட படையணி தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதியை, நிலைய தளபதி கேணல் சசங்க பெரேரா அவர்கள் வரவேற்றுதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படையணியின் நினைவுத்தூபியில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த அவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையணி ஊழியர்கள் முன்னிலையில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒரு சம்பிரதாயமாக, புதிய தளபதி அனைத்து படையினர்களுக்குமான தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்கு முன்பதாக அனைத்து படையினர்ளுக்கும் உரையாற்றினார்.

மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த அவர்கள் தனது புதிய நியமனத்திற்கு முன்னர் பாதீடு மற்றும் நிதிப் பணிப்பாளராக பணியாற்றினார். அண்மையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் பாலித ஹேவாவசம் அவர்களுக்கு பதிலாகவே இவர் இந்த நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.