15th September 2022 19:30:47 Hours
211 வது பிரிகேட் படையினர் கடவத்திரம்பாவ, மதவாச்சி பொதுப் பகுதியின் ஆதரவற்ற வறிய குடும்பத்திற்கு உதவி வழங்கும் நிமித்தம், பொறியியலாளர் திருமதி ஓஷதி ஹேரத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் உறுப்பினர்களின் உறுதியளிக்கப்பட்ட நிதியுதவியுடன் புதிய வீட்டை நிர்மாணிக்கத் தயாராக உள்ளனர்.
21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்களின் ஆசிர்வாதத்துடன், 211 வது பிரிகேட் படையினரால், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21 வது படைப் பிரிவின் 211 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தனது பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்தும் திருமதி பிரேமசிறிகே நிசன்சலா பிரேமசிறியின் குடும்பத்திற்கு இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு 2022 செப்டம்பர் 8 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி எம் சி மளவியாராச்சி, கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் திரு எஸ் பி ஜயலத், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கஜபா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் விஸ்வஜித் வித்யானந்த, 211 வது பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி உட்பட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
211 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் அழைப்பாளர்களுடன் இணைந்து அடிக்கல்லை நாட்டினார்.