14th September 2022 18:07:18 Hours
வவுனியா, பெரியவளயங்கந்து பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வழங்கும் நிமித்தம் 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர், குடிநீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி முகாம் நுழைவாயிலில் குடிநீர் வசதிகளை செவ்வாய்க்கிழமை (8) ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இத் திட்டமானது 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.ஜே.பி ராஜபக்ஷ அவர்களின் வேண்டுகோளிற்கமைய 15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் மேற்பார்வையின் கீழ் குருநாகலைச் சேர்ந்த திரு ஆர்.எம் பத்திராஜா அவர்களின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 56 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
562 வது பிரிகேட் தளபதி கேணல் அனுர ஜயசேகர கிராமங்களின் குடிநீர் சிரமங்களை கருதிற் கொண்டு இத் திட்டத்தில் முன்முயற்சி எடுத்தார்.
இந் நிகழ்வில் 15 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.