13th September 2022 17:22:30 Hours
வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய பாதுகாப்பு தலைமையக கட்டளையின் கீழ் உள்ள 12 வது படைப்பிரிவு மற்றும் 122 வது பிரிகேட் ஆகியவற்றின் கீழ் சேவையாற்றும் 100 படையினர் வெள்ளிக்கிழமை (09) அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஊடாக நோயாளிகளின் நலனுக்காக இரத்த தானம் செய்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, 122 வது பிரிகேட் தளபதி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீகா குலசேகர, இந்த மனிதாபிமான உயிர்காக்கும் சிறப்புத் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு அதிகாரிகள் உட்பட தனது படையினருக்கு பணித்தார்.
இரத்த வங்கியின் மருத்துவ அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிற்றூழியர்கள் இராணுவத்தின் சிந்தனைமிக்க ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்தனர்.