09th September 2022 13:00:31 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆவது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 7 வது இலங்கை பொறியியலாளர் படையினர் மட்டக்களப்பு / மன் மேற்கு பாவட்கொடிச்சேனை விநாயகர் கல்லூரியில் விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்காக இப் பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்க முன் வந்துள்ளனர்.
இத் திட்டமானது 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டாரவின் மேற்பார்வையில் மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் புதன்கிழமை (7) ஆரம்பமாகின. இப்பகுதியில் உள்ள நன்கொடையாளர்கள் விளையாட்டு மைதானத்தில் தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்க நிதியுதவி வழங்குகின்றனர்.
கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஹிலா கனகசூரியம், 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, , 23 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி கேணல் கசுன் அதிகாரி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் ஒருங்கிணைப்பு மற்றும் சிவில் அலுவல்கள் அதிகாரி, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். முருகேஸ் பிள்ளை, அதிபர் திரு. எஸ். புஷ்பஹரன், பெற்றோர்கள் உட்பட மாணவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.