09th September 2022 13:55:31 Hours
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி - 28 ஐச் சேர்ந்த கஜபா படையணியின் மேஜர் உஷான் வீரசிங்க (ஓய்வு) அவர்களின் இராணுவ சம்பிரதாய இறுதிக்கிரியைகள் இன்று (8) பிற்பகல் நெதிமாலை 'நிசல அரன' மயானத்தில் பூரண இராணுவ மரியாதையுடன் இடம்பெற்றது.
முதலாவது கஜபா படையணியில் சேவையாற்றுகையில் இவர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது அச்சமின்றிப் பங்களிதமைக்கும் தாய்நாட்டின் பாதுகாப்பில் அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளை அங்கீகரிக்கும் வகையிலும் ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பி), தேசபுத்திர பதக்கம் மற்றும் சில பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பெபிலியான விகாரை மாவத்தையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தளபதி மறைந்த போர்வீரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது அவரின் அர்ப்பணிப்பு மற்றும் போர்த்திறன்களை பற்றி அவர்களிடம் நினைவுகூர்ந்தார்.
மறைந்த போர்வீரர் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வு பெற்றார். அவரது திடீர் மரணத்திற்கு முன்னர் சிறிது காலம் சிகிச்சையில் இருந்தார். இராணுவ மரியாதையுடன் அவரது இறுதி ஊர்வல நிகழ்வுகள் அவரது நண்பர்களால் செலுத்தப்பட்டது.
சக அதிகாரிகள் மற்றும் முதலாவது கஜபா படையணி படையினரால் இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு இணங்க இறுதிகிரியை நிகழ்வுகள் பொதுமக்கள் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டது.