10th September 2022 20:00:27 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, தியத்தலாவவில் அமைந்துள்ள 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி முகாமிக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
முகாம் வளாகத்தை வந்தடைந்த மேஜர் ஜெனரல் சமந்த சில்வாவை 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டீ.எச்.எஸ்.எல் குமாரசிரி வரவேற்றார். அதைத் தொடர்ந்து, இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு அமைய இராணுவ வீரர்கள் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தினர்.
பின்னர், படையணியின் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரிடம் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள், எதிர்காலத்தில் படைப்பிரிவுக்கான தனது முன்னோக்குபார்வையினை விவரித்தார்.
அன்றைய நிகழ்வுக்கு நினைவுகளைச் சேர்க்கும் முகமாக வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் முகாம் வளாகத்திற்குள் மரக்கன்றை நட்டார்.