07th September 2022 16:33:56 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் ‘Foundation of Goodness’ தொண்டு நிறுவன அனுசரனையாளரான திரு.குசில் குணசேகர அவர்களின் உதவுயுடன் கடந்த திங்கட்கிழமை (5) கந்தகாடு, தம்மின்ன, செவனப்பிட்டிய மற்றும் மஹவெவ ஆகிய பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு உலர் உணவுப் பொதிகளை இலவசமாக வழங்கினர்.
இராணுவத்தின் நல்லெண்ணம் மற்றும் பெருந்தன்மையை தொடர்பு படுத்தும் முகமாக கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களினால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெறுக்கடி காரணமாக, பக்தர்கள் பௌத்த பிக்குகளுக்கு தொடர்ந்து உலர் உணவு பொருட்களை வழங்க முடியாமையின் காரணமாக, பௌத்த பிக்குகளின் மடலாயங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விகாரைகளில் தியானம் செய்து ஆன்மீக வாழ்க்கையில் உள்ள புத்த பிக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு முயற்சி எடுத்துள்ளது.
இந் நிவாரணப் பொதிகளில் அரிசி, பருப்பு, சீனி, மசாலாப் பொருட்கள், ஊட்டச்சத்துக்கள், சுகாதாரத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியிருந்தன. கிழக்கு பாதுகாப்பு படைத் தழைமையக படையினர் நன்கொடையாளருடன் இணைந்து பௌத்த விகாரைகள் மற்றும் மடலாயங்களுக்கு நிவாரணப் பொதிகளை விநியோகித்தனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, நன்கொடையாளர் திரு. குஷில் குணசேகர, சிவில் விவகார பிரதான ஒருங்கிணைப்பாளர் கேணல் ராஜிவ் பெர்னாண்டோ, 9 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினர் இவ் விநியோகத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.