08th September 2022 12:00:56 Hours
54 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், 2022 செப்டெம்பர் 04 ஆம் திகதி 54 வது படைப் பிரிவின் கட்டளையின் கீழ் அமைந்துள்ள 543 வது பிரிகேட் படையினர் 54 வது படைப்பிரிவின் 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு தல்லாடி முதல் மன்னார் பாலம் வரையான கடற்கரை பகுதியினை துய்மையாக்கும் விசேட சிரமதான நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.
பெருமழையுடன் கூடிய பிரதேசத்தில் டெங்கு தொற்றை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்படி சமூக செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
54 வது படைப் பிரிவின் கேணல் பொது பணி கேணல் சுதத் அதிகாரி மற்றும் 54 வது படைப்பிரிவின் சிவில் விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் அமித மங்கள மற்றும் 150 இராணுவத்தினர் மற்றும் மன்னார் மாநகர சபையின் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.