08th September 2022 12:15:56 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 வது படைப்பிரிவின் 681 வது பிரிகேட் கட்டளையின் கீழ் உள்ள 9 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் திங்கட்கிழமை (5) சுகந்திபிரம் முன்பள்ளியில் கல்வி பயிலும் 20 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலை உணவுகளை வழங்கினர்.
இந்த நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக படையினர் ஒன்றினைந்து நிதியுதவியினை வழங்கினர். அதே நேரத்தில் சிறார்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
மேலும் சிறுவர்கள் மற்றும் கலந்துகொண்டவர்களுக்கு படையினர் காலை உணவை வழங்கினர்.