07th September 2022 16:15:56 Hours
விஜயபாகு காலாட்படை படையணியின் மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்கள், அனுராதபுரம், ரணசேவபுரத்தில் உள்ள 21 வது படைப்பிரிவின் 36 வது தளபதியாக புதன்கிழமை (31) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 21 வது படைப்பிரிவின் தளபதியை பதவிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன், அவர் படைப்பிரிவின் வளாகத்தினுள் வருகை தந்த போது 7 வது இலங்கை கவச வாகன படையணியின் படையினரால் காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.
அவரது புதிய அலுவலகத்தில், தளபதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். பின்னர், புதிய தளபதி அனைத்து படையினர் மத்தியில் உரையாற்றுகையில், அவர் படைப்பிரிவின் எதிர்காலம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 21 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.