05th September 2022 18:22:50 Hours
கிளிநொச்சி மாணவர்களின் பூப்பந்து திறமையை ஊக்குவிக்கும் உன்னத நோக்கத்துடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 வது படைப் பிரிவின் கீழுள்ள 571 வது பிரிகேட் படையினரால் கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதான கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பூப்பந்து உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
571வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமில கம்லத் அவர்களிகன் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்காவில் வசிக்கும் திரு. ஷான் ஸ்கந்த குமார் அவர்களால் ரூபா 50,000/= பெறுமதியான பூப்பந்து பூக்கள் மற்றும் ரொக்கெட்டுகளை வழங்குவதற்கான அனுசரணை வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியவர்கள் பூப்பந்து உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்துக் கல்லூரி மற்றும் கிளிநொச்சி புனித தெரேசா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பூப்பந்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு 571 வது பிரிகேட் தளபதி பாடசாலை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
கிளிநொச்சி வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பயனாளிகள், அதிபர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.