30th August 2022 15:34:14 Hours
இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் பிரிகேடியர் பிரியந்த அபேசிங்க அவர்கள் பனாகொடவில் உள்ள அவரது அலுவலகத்தில் சம்பள கொடுப்பனவு பணிப்பகத்தின் 20 வது பணிப்பாளராகப் பதவியேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்த புதிய நியமனத்திற்கு முன்னர், அவர் இராணுவ நலன்புரி நிதியத்தின் பணிப்பாளராக பணியாற்றினார்.
பணிப்பகத்தின் பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அண்மையில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் பாலித ஹேவாவசம் அவருக்கு பதிலாக அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.