29th August 2022 18:50:08 Hours
அம்பாறை துடுகெமுனு ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் 24 மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (23) பாடசாலைப் பைகள், காலணிகள், எழுதுபொருட்கள் உட்பட அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் கல்வியை தொடர உதவும் நோக்கில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு ரூபா 750/= வைப்பிலடப்பட்டது. இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சோல் அறக்கட்டளையின் மேஜர் குசும்சிறி லியனகே (ஓய்வு) மற்றும் அம்பாறை மக்கள் வங்கி ஆகியவற்றினால் இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கப்பட்டது.
532 வது பிரிகேட் தளபதி கேணல் சுமல் விக்கிரமசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் பாடசாலை வளாகத்தில் விநியோகத் திட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி இந்த திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
532 வது பிரிகேட் தளபதி, 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் தனுக வீரபுர மற்றும் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 2 வது கட்டளைத் தளபதி மேஜர் எச்.எம்.எச்.ஏ கபிலரத்ன ஆகியோர் அனுசரணையாளர்களுடன் இணைந்து விநியோக திட்டத்திற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்கினர்.