29th August 2022 18:52:38 Hours
பொலன்னறுவை மாவட்டத்தின் அரலகங்வில பிரதேசத்தில் உள்ள தெஹியத்தபிட்டிய யாய, ஜயமுத்துகம மற்றும் யாய 03 ஆகிய இடங்களில் வசிக்கும் 100 வறிய குடும்பங்களுக்கும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 100 பாடசாலை மாணவர்களுக்கும் உலர் உணவுப் பொதிகள், ஆங்கிலம் - சிங்கள அகராதிகள் என்பன சனிக்கிழமை (27) அரலகங்வில மகாவலி கலாசார மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கான அனுசரணையானது கம்பஹாவில் வசிக்கும் திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களினால் வழங்கப்பட்டது.
இந்த நன்கொடை நிகழ்ச்சி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 100 உலர் உணவு பொதிகள், ஒவ்வொன்றும் ரூ. 5000.00 பெறுமதி என்பதுடன் அவர்களது பிள்ளைகளுக்கு ரூபா 100 ஆங்கிலம் - சிங்கள அகராதிகள் வழங்கப்பட்டது. அதே சந்தர்ப்பத்தில் அவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்காக ரூபா. 2500.00 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 23 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் எம்.கே.எஸ்.எஸ்.பி ஜயசிங்க, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விநியோக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.